விருத்தாசலம் காந்தி நகரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சுரேஷ்குமார் (28). பெயிண்டராக கூலி வேலை பார்த்து வந்தார். இவர் மதுப் பழக்கத்துக்கு அடிமையான நிலையில் மனநிலையிலும் சற்று பாதிப்பு ஏற்பட்டதாம். இந்த நிலையில், தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாரம். இதுகுறித்து அவரது சகோதரர் கோவிந்தராசு அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்து சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.