வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க ஆராய்ச்சி நிலையத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பண்ருட்டி ரா.சஞ்சீவிராயர் எழுதிய "தமிழர் சமயம்' என்ற நூல் வெளியிடப்பட்டது.
ஊரன் அடிகளார் நூலை வெளியிட, முதல் பிரதியை ராசாக்குப்பம் வள்ளலார் வழி இதழாசிரியர் அரங்க நா.கிருஷ்ணமூர்த்தி, கொளக்குடி பேராசிரியர் சிவ.சிவப்பிரகாசம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர் (படம்). நூலாசிரியர் ரா.சஞ்சிவீராயர் ஏற்புரை நிகழ்த்தினார். காட்டுக்கூடலூர் மணிகண்டன் நன்றி கூறினார்.