கடலூரில் படகு கவிழ்ந்ததில் மீனவர் காயமடைந்தார்.
கடலூர், தேவனாம்பட்டினம் தாழங்குடா பகுதியைச் சேர்ந்தவர் மணியரசன் (28). இவர், புதன்கிழமை அதிகாலை அதே பகுதியைச் சேர்ந்த ஆதிகுமார்(25), பால்ராஜ்(42), கோபிநாத்(19) ஆகியோருடன் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றார்.
படகை கடலில் இயக்கிய போது கடல் சீற்றத்துடனும், காற்றின் வேகம் அதிகமாகவும் இருந்ததாம்.
ஒரு கட்டத்தில் கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்ததில் மணியரசன் படகின் அடியில் சிக்கி காயம் அடைந்தார்.
எஞ்சிய 3 பேர் மணியரசனை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் பெரும்பாலான படகுகள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.