ரௌடிகள் இருவர் கைது

வடலூரில் ரௌடிகள் இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

வடலூரில் ரௌடிகள் இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
வடலூர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையில் போலீஸார் மருவாய் அருகே புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியே வந்த இருவரை பிடித்து விசாரிக்க முயன்றபோது ஒருவர் தப்பியோட முயன்று கீழே விழுந்து காலில் காயமடைந்தார். அவர்களிடம் விசாரணை நடத்தியதில்,  பேருந்து கண்ணாடிகளை உடைக்கவும், அரசு மதுக் கடையில் கொள்ளை அடிக்கவும், கண்காணிப்பு கேமரா இல்லாத பெட்ரோல் நிலையங்களில் பணம் பறிக்க திட்டம் தீட்டியதும் தெரிய வந்தது.
வடலூர், அன்னை சத்யா வீதியைச் சேர்ந்த ரௌடிகள் அருள் பாண்டி(27), ஆபத்தாரனபுரம் அய்யப்பன்(27) ஆகிய அந்த இருவரை கைது செய்தனர். இவர்கள் இருவர் மீதும் கொள்ளை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளனவாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com