பொங்கல் திருநாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி சார்பில், பண்ருட்டி ஒன்றியம், மேல் அருங்குணம் கிராமத்தில் தமிழ் புத்தாண்டு மற்றும் திருக்குறள் கோலப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
கட்சியின் பண்ருட்டி ஒன்றியச் செயலர் மகாதேவன் தலைமை வகித்தார்.
தொகுதிச் செயலர் வெற்றிவேலன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
தொகுதி இளைஞர் பாசறைச் செயலர் பிரகாஷ், தொழிலாளர் பாசறைச் செயலர் சாதிக் பாட்சா, பண்ருட்டி நகரச் செயலர் வேல்முருகன், அண்ணாகிராமம் (நடுவண்-1) ஒன்றியச் செயலர் இன்பன், பண்ருட்டி ஒன்றிய துணைச் செயலர் தனுசுராமன், மேல் அருங்குணம் கிளைச் செயலர் சுந்தர்ராஜன் உள்பட கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். திருக்குறள் எழுதி அழகிய கோலம் போடும் போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஓவியர்கள் ரமேஷ், பாலா நடுவர்களாக செயல்பட்டு பரிசுக்கு உரியவர்களை தேர்வு செய்தனர்.
முதல் முன்று பரிசுகள் முறையே தலா மூன்று பேருக்கு வழங்கப்பட்டது. 10 பேருக்கு ஆறுதல் பரிசுகளும், போட்டியில் பங்கேற்றவர்களுக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.