புவனகிரி வட்டம், தம்பிக்குநல்லான்பட்டினத்தில் பிற்படுத்தப்பட்டோர் பேரவை தலைமை அலுவலகத்தில் கொடியேற்று விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கடலூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் சந்தோஷ்குமார் தலைமை வகித்தார். புவனகிரி ஒன்றியச் செயலர் சத்தியராஜ் வரவேற்றார். மாநில இளைஞரணிச் செயலர் டெல்டா விஜயன், மாநில இளைஞரணித் தலைவர் ராஜசேகர், மாவட்டச் செயலர் வீரவன்னியவேங்கன், மாநில அமைப்புச் செயலர் திருமலைராஜன், மாநில ஓபிசி தொழிற்சங்கம் ரவிச்சந்திரன், இணைப் பொதுச் செயலர் அரங்க.பாஸ்கர், மாவட்டத் தொழிற்சங்கத் தலைவர் சிவக்குமார், செயலர் சண்முகவேல், பரங்கிப்பேட்டை ஒன்றிய இளைஞரணிச் செயலர் முருகன், மாவட்டச் செய்தித் தொடர்பாளர் வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரவையின் அகில இந்திய பொதுச் செயலர் வீரவன்னியராஜா கொடியேற்றி வைத்துப் பேசினார்.