மங்கலம்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநாட்டு விளக்க இருசக்கர வாகனப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில், "தேசம் காப்போம்' மாநாடு புதன்கிழமை (ஜன. 23) நடைபெறுகிறது.
இதையொட்டி, விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில் நகர விசிக சார்பில் மாநாடு விளக்க இருசக்கர வாகனப் பேரணி திங்கள்கிழமை நடத்தப்
பட்டது.
பேரணிக்கு நகர செயலர் எம்.கே.இளம்அம்பேத் தலைமை வகித்தார். கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ம.செ.சிந்தனைச்செல்வன் கலந்து கொண்டு பேசினார். ராஜகுமரன் நன்றி கூறினார்.