விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கடலூர் மாவட்டத்தை பிரித்து விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வலியுறுத்தி, விருத்தாசலம் விழிப்புணர்வு இயக்கம் உருவாக்கப்பட்டது. இந்த இயக்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, விருத்தாசலம் புதிய மாவட்டம் அமைக்க வலியுறுத்தி, விருத்தாசலம் திரு.கொளஞ்சியப்பர் அரசுக் கலைக் கல்லூரி வளாகத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
கையெழுத்து இயக்கத்தை கொளஞ்சியப்பர் அரசுக் கலைக் கல்லூரி முதல்வர் வேலு தொடக்கி வைத்தார். விவசாய சங்கப் பிரதிநிதி கர்மாங்குடி எஸ்.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்று கையெழுத்திட்டனர்.