காய்கறி, பழங்களை பதப்படுத்தும் பயிற்சி

தொழில் முனைவோருக்கான வணிக முறையில் காய்கறி, பழங்களைப் பதப்படுத்தும் பயிற்சி, விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற உள்ளதாக திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.கண்ணன் தெரிவித்தார்.

தொழில் முனைவோருக்கான வணிக முறையில் காய்கறி, பழங்களைப் பதப்படுத்தும் பயிற்சி, விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற உள்ளதாக திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.கண்ணன் தெரிவித்தார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் பிப்.6 முதல் 8-ஆம் தேதி வரை தொழில் முனைவோருக்கான பயிற்சி நடைபெற உள்ளது.
 கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய இளைஞர்கள் மற்றும் பண்ணை மகளிருக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படும். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவு, தேநீர் வழங்கப்படும். முதலில் வரும் 30 நபர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர்.
 வரும் பிப்.4-ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது தொலைபேசி மூலமோ பதிவு செய்து கொள்ள வேண்டும்.
 திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், விருத்தாசலம் என்ற முகவரில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண் 04143-238353 என அதில் தெரிவித்துள்ளார் கண்ணன்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com