தொழில் முனைவோருக்கான வணிக முறையில் காய்கறி, பழங்களைப் பதப்படுத்தும் பயிற்சி, விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற உள்ளதாக திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.கண்ணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் பிப்.6 முதல் 8-ஆம் தேதி வரை தொழில் முனைவோருக்கான பயிற்சி நடைபெற உள்ளது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய இளைஞர்கள் மற்றும் பண்ணை மகளிருக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படும். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவு, தேநீர் வழங்கப்படும். முதலில் வரும் 30 நபர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர்.
வரும் பிப்.4-ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது தொலைபேசி மூலமோ பதிவு செய்து கொள்ள வேண்டும்.
திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், விருத்தாசலம் என்ற முகவரில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண் 04143-238353 என அதில் தெரிவித்துள்ளார் கண்ணன்.