நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் சனிக்கிழமை நடைபெறும் நிகழ்வுக்கு, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் செயல் இயக்குநர் அரவிந்த்குமார் தலைமை வகிக்கிறார். சென்னை துறைமுகத்தின் தலைவர் பி.ரவீந்திரன் முதன்மை விருந்தினராகவும், சென்னையைச் சேர்ந்த ஆர்.நிரஞ்சன்பாரதி சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்கின்றனர்.
பாராட்டப்படும் எழுத்தாளர்கள் வரிசையில் சி.எஸ்.முருகசேனும், பாராட்டப்படும் பதிப்பாளர்கள் வரிசையில் சென்னை ராம்கா புக்ஸ் நிறுவனத்தாரும் கெளரவிக்கப்பட உள்ளனர்.
கவிஞர் தேன் தமிழனின் "குளிரில் நடுங்கும் நெருப்பு' என்ற நூல் வெளியிடப்படுகிறது. கலை, இலக்கிய நிகழ்வில் உன்முக்தா சின்ஹா குழுவினரின் பன்முகக் கலாசார நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது.