சன்மார்க்க சங்கக் கூட்டம்

வடலூர் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின்  செயற்குழுக் கூட்டம் வடலூரில் அண்மையில் நடைபெற்றது.


வடலூர் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின்  செயற்குழுக் கூட்டம் வடலூரில் அண்மையில் நடைபெற்றது.
 கூட்டத்துக்கு, அமைப்பின் மாநிலத் தலைவர் படப்பை பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். பார்வதிபுரம் ராஜேந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலர் வெற்றிவேல் தீர்மானங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.
 கூட்டத்தில், வடலூர் பகுதியை புனித பூமியாக அறிவிக்க வேண்டும். இந்தப் பகுதியில் உயிர்பலி தடைச் சட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும். வருகிற டிசம்பர் மாதம் வடலூரில் சன்மார்க்க மாணவர்கள் மாநாடு நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில துணைப் பொதுச் செயலர் கணேசன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com