மார்க்சிஸ்ட் கையெழுத்து இயக்கம்

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவை எதிர்த்து, பண்ருட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவை எதிர்த்து, பண்ருட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
பண்ருட்டி நகரக்குழு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, நகரச் செயலர் உத்திராபதி தலைமை வகித்தார். பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் உதயகுமார் கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்தார். மாவட்டக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கே.ஏழுமலை, போக்குவரத்து சங்கத் தலைவர் தேவராஜ், நகர்க்குழு ஜீவா, தினேஷ், நடராஜன், ராஜேந்திரன், விவசாய தொழிலாளர்கள் சங்க ஒன்றியத் தலைவர் பன்னீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல, அண்ணாகிராமத்தில் நடைபெற்ற பிரசாரம் மற்றும் கையெழுத்து இயக்கத்தில் மாநிலக்குழு உறுப்பினர் மாதவன்,  மாவட்டக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கே.ஏழுமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com