தீ விபத்தால் பாதித்தோருக்கு நிவாரணம்

கடலூர் அருகே தீ விபத்தால் பாதித்த குடும்பத்துக்கு விடுதலைச் சிறுததைகள் கட்சியினர் புதன்கிழமை நிவாரண உதவிகளை வழங்கினர்.

கடலூர் அருகே தீ விபத்தால் பாதித்த குடும்பத்துக்கு விடுதலைச் சிறுததைகள் கட்சியினர் புதன்கிழமை நிவாரண உதவிகளை வழங்கினர்.
கடலூர் அருகே உள்ள திருமானிக்குழி கிராமத்தில் வசிப்பவர் மணிக்குமார். இவரது குடிசை வீடு புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த விசிக கடலூர் மக்களவை தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு அரிசி, ஆடைகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். 
நிகழ்ச்சியில் மாநில துணைச் செயலர் த.ஸ்ரீதர், மாவட்ட நிர்வாகிகள் சிவலிங்கம், சங்கர், சபரி, பிரபாகரன், புருஷோத்தமன், வீரமணி, முருகன், கோபி, பாக்கியராஜ், பாலமுருகன், விஜயராகவன், சிவராஜ், விநாயகமூர்த்தி, அறிவழகன், ராஜ்குமார், ஒன்றிய துணைச் செயலர் இளையபெருமாள், குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com