பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மையத்தில் 2019-20-ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை விழா வடலூர், ஆபத்தாரணபுரம் திருபூரநேனி அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வள்ளலார் கல்வி அறக்கட்டளைத் தலைவரும், பாரதிதாசன் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளருமான சு.ராஜ்குமார் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ் செம்மொழி பேரவைத் தலைவர் ரா.சஞ்சீவிராயர் பங்கேற்று பேசினார். மேலும், மாணவர் சேர்க்கையை தொடக்கிவைத்து கல்வி ஆலோசனைகளை வழங்கினார்.
நிகழ்வில் வேளாண் இயக்குநர் (ஓய்வு) பி.தனசேகரன், கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் பி.ச.துரைமணிராஜன், எம்பிசி பட்டதாரிகள் நலச் சங்கத் தலைவர் டி.அசோக்குமார், மாவட்டச் செயலர் சிவக்குமார் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்வில், திருபூரநேனி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு மின்சாதனப் பொருள்களை வள்ளலார் கல்வி அறக்கட்டளைத் தலைவர் சு.ராஜ்குமார் அன்பளிப்பாக வழங்கினார்.