போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் கடலூர் பணிமனை அருகே செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் எம்.பெரியசாமி தலைமை வகித்தார். போக்குவரத்து ஊழியர்கள் சங்க பொதுச் செயலர் ஜி.மணிவண்ணன், துணைப் பொதுச் செயலர் பி.கண்ணன், துணைத் தலைவர் பி.எழிலரசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், போக்குவரத்து தொழிலாளர்கள் நாள்தோறும் 20 மணிநேரம் பணிபுரியும் வகையிலான நடவடிக்கையை கைவிடவேண்டும்என வலியுறுத்தினர்.