சிதம்பரம் அருகே உள்ள பு.மடுவங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சார்பில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆ.மோகன் பங்கேற்று பேரணியை தொடக்கி வைத்தார். பள்ளித் தலைமை ஆசிரியை ரா.ஈஸ்வரி வரவேற்றார்.
இந்தப் பள்ளியில் முதல் வகுப்பில் புதிதாக சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு "மிஸ்டர்' மடுவங்கரை, "மிஸ்' மடுவங்கரை பட்டம் வழங்கப்பட்டு, கிரீடம் சூட்டப்பட்டு ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
உதவி ஆசிரியை பா.லட்சுமிபாரதி, சிறப்பு ஆசிரியை செல்வி மணிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.