வீட்டுமனை பட்டா கோரி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி நரிக்குறவர்கள் சமுதாயத்தினர் சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.

வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி நரிக்குறவர்கள் சமுதாயத்தினர் சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
 சிதம்பரம் அருகே உள்ள லால்புரம் கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் வி.எம்.சேகர் தலைமையில் சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அந்த அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com