கோயில் வளாகத்தில் புகையிலைப் பொருள்களை விற்றதாக 10 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
விருத்தாசலம் அருகேயுள்ள மணவாளநல்லூரில் கொளஞ்சியப்பர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் வளாகத்தில் புகையிலைப் பொருள்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அங்குள்ள சில கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, மங்கலம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் நாட்டுத்துரை, பக்தவச்சலம், ராஜா, வீரமணி ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தடை செய்யப்ட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக 10 கடைகளுக்கு மொத்தம் ரூ. 1,500 அபராதம் விதிக்கப்பட்டது. கோயில் செயல் அலுவலர் மாரிமுத்து, கோயில் மேலாளர் குருநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.