தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, பண்ருட்டியில் அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகளை மூடும் பணியில் நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல, பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்டப் பகுதிகளில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், பதாகைகள், கொடிக் கம்பங்கள், கொடிகள் ஆகியவற்றை அகற்றும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.