கடலூர்
அனைத்து கட்சிகள் கூட்டம்
விருத்தாசலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து சார்- ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் அனைத்துக் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விருத்தாசலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து சார்- ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் அனைத்துக் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விருத்தாசலம் வட்டாட்சியர் கவியரசு, மண்டலத் தேர்தல் துணை வட்டாட்சியர் அன்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி, அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே பொதுக் கூட்டம், தெருமுனைக் கூட்டங்களை நடத்த வேண்டும்.
கொடிக் கம்பங்கள், கட்சிகளின் சின்னம், தலைவர்களின் சிலைகளை மூடி மறைக்க வேண்டும். தேர்தல் அதிகாரிகளுக்கு அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகளை சார் -ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.