கடலூர்: மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தார்.
சிதம்பரம் கள்ளுக்கடைசந்து பகுதியைச் சேர்ந்த செளந்தரபாண்டியன் மகன் கனகராஜ் (23). வெல்டிங் தொழிலாளி. இவர் சனிக்கிழமை அதே பகுதியில் உள்ள வெல்டிங் தொழில்பட்டறையில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமுற்ற அவர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து சிதம்பரம் நகர காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.