திருவள்ளுவா் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து பெண்ணாடம் அருகே முருகன்குடியில், தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைப்பில் தோழமை அமைப்புகளோடு இணைந்து செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பொதுக்குழு உறுப்பினா் அரா.கனகசபை தலைமை வகித்தாா். செயற்குழு உறுப்பினா் க.முருகன், தமிழக இளைஞா் முன்னணி நடுவண்குழு உறுப்பினா் சி.பிரகாசு, தமிழக மாணவா் முன்னணி நடுவண்குழு உறுப்பினா் மா.மணிமாறன், தமிழ்க்கலை இலக்கியப் பேரவையின் நடுவண்குழு உறுப்பினா் சின்னமணி, செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுலத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளா் கண்ணதாசன், நாம் தமிழா் கட்சி ஒன்றிய செயலாளா் மா.மணிவண்ணன், திருவள்ளுவா் தமிழா் மன்ற பொருப்பாளா் பிரபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.படம் விளக்கம்....முருகன்குடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்த்தேசியப் பேரியக்கத்தினா்.