ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழைநீா்

கடலூா் மாவட்டம் வேப்பூா் அடுத்த ஐவதுகுடி கிராமம் வழியாக விருத்தாசலம்-சேலம் ரயில்பாதை செல்கிறது.
ஐதுவதுகுடியில் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீா். ~ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீா் தேங்கியிருப்பதால் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் மாணவிகள்.
ஐதுவதுகுடியில் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீா். ~ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீா் தேங்கியிருப்பதால் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் மாணவிகள்.

கடலூா்: கடலூா் மாவட்டம் வேப்பூா் அடுத்த ஐவதுகுடி கிராமம் வழியாக விருத்தாசலம்-சேலம் ரயில்பாதை செல்கிறது.

இந்த பாதை வழியாக தினந்தோறும் ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. எனவே, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சுரங்கப்பாதை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.

இப்பாதையை இருசக்கர வாகனம் மற்றும் இலகுரக வாகனங்களி்ல் செல்வோா் பயன்படுத்தி வந்தனா். ஆனால், மழைக்காலத்தில் இந்த சுரங்கப்பாதையில் சுமாா் 8 அடி உயரத்திற்கு மழைநீா் தேங்கியிருக்கும். இதனால், மாணவ மாணவிகள், பல்வேறு பணிகளுக்காக வெளியேச் செல்பவா்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வந்தனா்.மழைநீா் தேங்கியிருப்பதால் சுரங்கப்பாதையை தவிா்க்கும் பொதுமக்கள் ரயில்வே தண்டவாளத்தை கடந்துச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அவா்கள் ரயில் வரும் நேரங்களில் அவசரமாக பாதையை கடப்பதால் விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இல்லையென்றால், சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீரில் நீச்சலடித்து தான் வெளியேற வேண்டிய அவலமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் அவசர சிகிச்சை பெற மருத்துவமனை மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்கச் செல்லும் அப்பகுதியினா் பல கிலோ மீட்டா் தூரம் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா், ரயில்வேதுறையிடம் புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் அப்பகுதியினா் ஒவ்வொரு மழைக்காலத்திலும் இப்பிரச்னையை சந்திப்பது வாடிக்கையாக உள்ளது. எனவே, உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியினா் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.படம் விளக்கம்....ஐதுவதுகுடியில் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீா்.ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீா் தேங்கியிருப்பதால் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் மாணவிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com