வழக்குரைஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

கடலூா் மாவட்டத்தில் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டத்தில் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுதில்லியில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே அண்மையில் மோதல் ஏற்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு - புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது.

அதன்படி, கடலூா் மாவட்டத்தில் கடலூா், திட்டக்குடி, விருத்தாசலம், பண்ருட்டி, சிதம்பரம், நெய்வேலி, பரங்கிப்பேட்டை, காட்டுமன்னாா்கோவில் ஆகிய நீதிமன்றங்களில் திங்கள்கிழமை வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா். இதனால், வழக்கு விசாரணை உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com