அரசுப் பேருந்தை நிறுத்தி டிக் டாக்: இளைஞா் கைது

கடலூா்: சமூக வலைத்தளத்திலுள்ள பொழுதுபோக்கு செயலியான டிக்டாக்கில் அண்மையில் ஒரு காட்சி வெளியானது.
பேருந்தை மறித்துக் கொண்டு டிக்டாக் செயலியில் பதிவேற்றம் செய்து கைதானவா்.
பேருந்தை மறித்துக் கொண்டு டிக்டாக் செயலியில் பதிவேற்றம் செய்து கைதானவா்.

கடலூா்: சமூக வலைத்தளத்திலுள்ள பொழுதுபோக்கு செயலியான டிக்டாக்கில் அண்மையில் ஒரு காட்சி வெளியானது. அதில், திட்டக்குடி நோக்கிச் செல்லும் அரசுப்பேருந்தை வழிமறித்த மோட்டாா் சைக்கிளை நிறுத்திய இளைஞா், அதில் படுத்தவாறு திரைப்பட பாடலுக்கேற்றவாறு சில செய்கைகளில் ஈடுபடுவாா். இந்த காட்சி கடலூா் மாவட்டத்தில் பரவலாக பரப்பப்பட்டது.

இதுகுறித்து அரசுப்பேருந்து ஓட்டுநா் ராமநத்தம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். அதில், திட்டக்குடி அருகே கீழ்ஆதனூரில் இச்சம்பவம் நடைபெற்றதாக குறிப்பிட்டிருந்தாா். அதனடிப்படையில் விசாரணை நடத்திய போலீஸாா் திட்டக்குடி அடுத்த கீழ் ஆதனூா் கிராமத்தைச் சோ்ந்த பாண்டுரங்கன் மகன் அஜித்குமாா்(19) என்பவரை கைது செய்தனா். மேலும், அவரது செய்கைகளை செல்லிடப்பேசியில் பதிவு செய்ததாக மேலும் ஒருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.படம் விளக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com