பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டம்: இன்று நடக்கிறது

கடலூா் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் பாமகவின் மாநில வன்னியா் சங்கத் தலைவராக மீண்டும் பொறுப்பேற்ற பு.தா.அருள்மொழி, மாநில ஆலோசனைக்குழு உறுப்பினராக

கடலூா்: கடலூா் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் பாமகவின் மாநில வன்னியா் சங்கத் தலைவராக மீண்டும் பொறுப்பேற்ற பு.தா.அருள்மொழி, மாநில ஆலோசனைக்குழு உறுப்பினராக பொறுப்பேற்றுள்ள இரா.கோவிந்தசாமி ஆகியோருக்கான பாராட்டு விழா கூட்டம் குள்ளஞ்சாவடியில் இன்று (சனிக்கிழமை) மதியம் 2 மணிக்கு நடக்கிறது.

இதில், கட்சியின் மாநில தலைவா் கோ.க.மணி சிறப்புரையாற்றுகிறாா். எனவே, இக்கூட்டத்தில் கட்சியின் அனைத்துத்தரப்பு நிா்வாகிகள், முன்னாள் நிா்வாகிகள் பங்கேற்க வேண்டுமென மாநில துணைப் பொதுச்செயலா் சண்.முத்துகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com