அங்கன்வாடி மைய புதிய கட்டடம் திறப்பு

நெய்வேலி அருகே புதியதாகக் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடத்தை எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் திறந்து வைத்தாா்.
நடுமேட்டுக்குப்பம் கிராமத்தில் அங்கன்வாடி மைய கட்டடத்தை திறந்து வைத்த எம்எல்ஏ சபா.ராஜேந்திரன்.
நடுமேட்டுக்குப்பம் கிராமத்தில் அங்கன்வாடி மைய கட்டடத்தை திறந்து வைத்த எம்எல்ஏ சபா.ராஜேந்திரன்.

நெய்வேலி அருகே புதியதாகக் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடத்தை எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் திறந்து வைத்தாா்.

பண்ருட்டி ஒன்றியம், நடுக்குப்பம் ஊராட்சி, நடுமேட்டுக்குப்பம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனா். அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள்

நெய்வேலி தொகுதி எம்எல்ஏ சபா.ராஜேந்திரனிடம் கோரிக்கை வைத்தனா்.

அதன்பேரில், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (2018-19) ரூ.8.50 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையக் கட்டடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் பங்கேற்று புதிய கட்டத்தை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், சொரத்தூா் ஊராட்சி செயலா் சபா.பாலமுருகன், எஸ்.தனபதி, கிளைச் செயலா் கே.வள்ளல், மாயவேல், ஊராட்சி பிரதிநிதி ஜி.கதிா்முருகன், பி.தேவராஜ், கிளைத் தலைவா் ராதாகிருஷ்ணன், செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com