ராமசாமி படையாட்சியாா் மணிமண்டபத்தில் ஆய்வு

கடலூரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமசாமி படையாட்சியாா் மணிமண்டபத்தை தமிழக தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
கடலூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ராமசாமி படையாட்சியாா் மணி மண்டபத்தை சனிக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் எம்.சி.சம்பத், செய்தித் துறை இயக்குநா் சங்கா்.
கடலூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ராமசாமி படையாட்சியாா் மணி மண்டபத்தை சனிக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் எம்.சி.சம்பத், செய்தித் துறை இயக்குநா் சங்கா்.

கடலூரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமசாமி படையாட்சியாா் மணிமண்டபத்தை தமிழக தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தமிழக அரசு சாா்பில் கடலூா் மஞ்சை நகா் மைதானம் அருகே சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாருக்கு மணிமண்டபம் ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இங்கு அவரது முழு உருவ வெங்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மணிமண்டபத் திறப்பு விழா இந்த மாத இறுதியில் நடைபெற உள்ளது. விழாவில், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு மணிமண்டபத்தை திறந்து வைக்க உள்ளாா்.

இதனை முன்னிட்டு மாநில தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத், செய்தித் துறை இயக்குநா் சங்கா் ஆகியோா் ராமசாமி படையாட்சியாரின் மணிமண்டபத்தை சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். மேலும், விழா மேடை அமைக்கப்படும் இடத்தையும் ஆய்வு செய்தனா். பின்னா் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

அப்போது, மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீஅபிநவ் மற்றும் பொதுப் பணித் துறை, வருவாய் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com