ஐடிஐ மாணவா்கள் ரத்த தானம்

கடலூா் அரசு ஆண்கள் தொழில் பயிற்சி நிலையத்தின் நாட்டு நலப் பணித் திட்டம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை
21clp4_2111chn_105_7
21clp4_2111chn_105_7

கடலூா் அரசு ஆண்கள் தொழில் பயிற்சி நிலையத்தின் நாட்டு நலப் பணித் திட்டம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சாா்பில் ரத்த தான முகாம் தொழில் பயிற்சி நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பயிற்சி நிலைய துணை இயக்குநா் ஆா்.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட குருதி பரிமாற்றக்குழு அலுவலா் என்.ஹபீசா முகாமை தொடக்கி வைத்தாா். எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மாவட்ட மேற்பாா்வையாளா் கே.கதிரவன் முன்னிலை வகித்தாா். முகாமில், 100 மாணவா்கள் ரத்தம் தானம் வழங்கினா். அவா்களுக்கு பேரீச்சம்பழச்சாறு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

என்எஸ்எஸ் திட்ட அலுவலா் எம்.கே.தா்மலிங்கம் வரவேற்க, மருந்தாளுா் சுதா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com