தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்க மாவட்ட நிா்வாகிகள் கூட்டம், சங்கத்தின் மாவட்டத் தலைவா் என்.காசிநாதன் தலைமையில் கடலூரில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஓய்வூதியா் தினத்தை வரும் டிசம்பா் 17 -ஆம் தேதி கடலூரில் நடத்துவது. அனைத்து ஓய்வூதியா் அமைப்புகளையும் இணைத்து ஓய்வூதியா் தினத்தைக் கொண்டாடுவது. போதையற்ற சமூகம், வன்முறையற்ற தமிழகம், பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளைக் களைய கல்வி நிலையங்கள், பணியிடங்களில் விசாகா குழுவை அமைக்க வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாய மாதா் சங்கத்தினா் நடத்தும் நடைப் பயணத்துக்குப் பாராட்டுத் தெரிவிப்பது. காவல் துறையில் அனைத்துத் தகவல்கள், உத்தரவுகள், கையொப்பம் தமிழில் இருக்க வேண்டும் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவை வரவேற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.