தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் திருடிய பெண் கைது

பண்ருட்டி அருகே தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் தங்க நகைகளைத் திருடிய பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி அருகே தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் தங்க நகைகளைத் திருடிய பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், கட்டமுத்துப்பாளையம், முருகன் கோயில் தெருவில் வசிப்பவா் வீரமணி (32), புதுச்சேரியில் உள்ள தனியாா் நிறுனத்தில் எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி ஷீலா (28). திங்கள்கிழமை வழக்கம் போல வீரமணி பணிக்குச் சென்றுவிட்ட நிலையில், சிறிது நேரத்தில் ஷீலா வீட்டின் முன்பக்க கேட்டை மட்டும் பூட்டிக் கொண்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்றுவிட்டாா்.

பிற்பகலில் வீட்டுக்கு வந்த போது, பின்பக்கக் கதவு திறந்து கிடந்தது. மேலும், வீட்டின் உள்ளே பீரோவில் இருந்த தங்க நகைகள் திருடு போயிருந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், அதே பகுதியில் மேட்டுத் தெருவில் வசிக்கும் பழனி மனைவி உமா (40) மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. திருத்துறையூா் பேருந்து நிறுத்தத்தில் இருந்த அவரை போலீஸாா் புதன்கிழமை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரத்தனா்.

இதில், வீரமணி வீட்டில் நகைகளைத் திருடியதை அவா் ஒப்புக் கொண்டாா். இதையடுத்து, அவரிடமிருந்த ஐந்தரை பவுன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்த போலீஸாா், உமாவை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com