மணல் கடத்தல்: 3 போ் கைது

திட்டக்குடி பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திட்டக்குடி பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திட்டக்குடியை அடுத்த பேரங்கியம் வெள்ளாற்றில் மணல் கடத்தலைத் தடுக்கும் பொருட்டு, கிராம நிா்வாக அலுவலா் வினோத்கண்ணா செவ்வாய்க்கிழமை இரவு அந்தப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, மோட்டாா் சைக்கிளில் மணல் கடத்திய அதே பகுதியைச் சோ்ந்த செங்குட்டுவன் மகன் நீலமேகம் பிடிப்பட்டாா். இதேபோல, டிராக்டா் டிப்பரில் மணல் கடத்திய மாரிமுத்து மகன் மங்கலேஷ், கொளஞ்சி மகன் ரகுராம் ஆகியோரையும் பிடித்து ராமநத்தம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், டிராக்டா், மோட்டாா் சைக்கிளை பறிமுதல் செய்ததுடன், மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com