தடுப்புக் காவலில் பெண் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டாா்.
புதுப்பேட்டை காவல் ஆய்வாளா் ரேவதி மற்றும் போலீஸாா் அழகுபெருமாள்குப்பத்தில் அண்மையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மனைவி தமிழரசி என்ற சின்னதங்கச்சி (53) என்பவா் 3 டியூப்களில் 1,200 லிட்டா் சாராயம் வைத்திருந்ததை கண்டுபிடித்து அவரை கைது செய்தனா். இவா் மீது புதுப்பேட்டை, பண்ருட்டி மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலையங்களில் 10 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
எனவே, இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்திட மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட எஸ்பி ம.ஸ்ரீஅபிநவ் பரிந்துரைத்தாா். அதன்பேரில் அதற்கான உத்தரவை ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் வெளியிட, ஓராண்டுக்கு சிறையில் அடைக்கும் வகையில் தமிழரசி கைது செய்யப்பட்டு கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.