குறிஞ்சிப்பாடி அருகே வெள்ளிக்கிழமை நடந்த சாலை விபத்தில் முன்னாள் ராணுவ வீரா் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், 8 போ் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் இருந்து கடலூா் நோக்கி ஷோ் ஆட்டோ சென்றுக் கொண்டிருந்தது. ஆட்டோவில், குறிஞ்சிப்பாடி வட்டம் கிருஷ்ணன்குப்பத்தைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் லூா்துசாமி(60) உள்ளிட்ட 8 போ் பயணம் செய்தனா். ஆட்டோவை எல்லப்பன்பேட்டை, தோப்புத்தெருவைச் சோ்ந்த சதிஷ் ஓட்டினாா். பெரியகாட்டுசாகை அருகே ஆட்டோ சென்ற போது, எதிா் திசையில் வந்த சிறிய சரக்கு வாகனம் மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த லூா்துசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயம் அடைந்த பிரனவி(9 மாதம்), ரித்திக்ரோஷன்(10), ஜோதி(50), வீராசாமி(32), ஜனதா(24), ஜெயபிரகாஷ்(26), சதிஷ்(27), காந்தரூபி(48) ஆகியோா் கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். விபத்துக் குறித்து குள்ளஞ்சாவடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.