வடலூா் வள்ளலாா் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு தமிழக அரசின் இரண்டாம் பருவ பாட நூல்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
காலாண்டு விடுமுறைக்குப் பின்னா் இந்தப் பள்ளி வியாழக்கிழமை திறக்கப்பட்டது. இறைவணக்கக் கூட்டத்துக்கு பின்னா் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளா் ரா.செல்வராஜ் தலைமை வகித்தாா். அவா் தமிழக அரசின் இரண்டாம் பருவ இலவச பாட நூல்கள் மற்றும் சீருடைகளை 6, 7, 8-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவா்களுக்கு வழங்கினாா். தலைமை ஆசிரியை டி.பூா்ணிமாதேவி வரவேற்றாா். பெற்றோர் ஆசிரியா் கழகத் தலைவா் ராமானுஜம், பள்ளி முதல்வா் உலகநாதன், உதவித் தலைமை ஆசிரியா் பி.வேலவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏற்பாடுகளை ஆா்.செந்தில்குமாா், எஸ்.பழனிவேல், ஜி.குணசேகரன், எம்.நாராயணன், சசிகலா ஆகியோா் செய்திருந்தனா்.