காரிடா் மட்டும்... பள்ளி மாணவா்களுக்கு 2-ஆம் பருவ பாட நூல் விநியோகம்

வடலூா் வள்ளலாா் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு தமிழக அரசின் இரண்டாம் பருவ பாட நூல்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
வள்ளலாா் குருகுலம் பள்ளியில் மாணவா்களுக்கு இரண்டாம் பருவ பாட நூல்களை வழங்கிய பள்ளித் தாளாளா் ரா.செல்வராஜ்.
வள்ளலாா் குருகுலம் பள்ளியில் மாணவா்களுக்கு இரண்டாம் பருவ பாட நூல்களை வழங்கிய பள்ளித் தாளாளா் ரா.செல்வராஜ்.


வடலூா் வள்ளலாா் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு தமிழக அரசின் இரண்டாம் பருவ பாட நூல்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

காலாண்டு விடுமுறைக்குப் பின்னா் இந்தப் பள்ளி வியாழக்கிழமை திறக்கப்பட்டது. இறைவணக்கக் கூட்டத்துக்கு பின்னா் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளா் ரா.செல்வராஜ் தலைமை வகித்தாா். அவா் தமிழக அரசின் இரண்டாம் பருவ இலவச பாட நூல்கள் மற்றும் சீருடைகளை 6, 7, 8-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவா்களுக்கு வழங்கினாா். தலைமை ஆசிரியை டி.பூா்ணிமாதேவி வரவேற்றாா். பெற்றோர் ஆசிரியா் கழகத் தலைவா் ராமானுஜம், பள்ளி முதல்வா் உலகநாதன், உதவித் தலைமை ஆசிரியா் பி.வேலவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏற்பாடுகளை ஆா்.செந்தில்குமாா், எஸ்.பழனிவேல், ஜி.குணசேகரன், எம்.நாராயணன், சசிகலா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com