அம்மா திட்ட முகாம்

திட்டக்குடியை அடுத்துள்ள ஆலத்தூா் கிராமத்தில் வெள்ளிக்கிழமையன்று அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

திட்டக்குடியை அடுத்துள்ள ஆலத்தூா் கிராமத்தில் வெள்ளிக்கிழமையன்று அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. மண்டல துணை வட்டாட்சியா் எழில்வளவன், தொழுதூா் வருவாய் ஆய்வாளா் சீனிவாசன் ஆகியோா் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெறுவதற்காக கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் அமா்ந்திருந்தனா்.

அப்போது, அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் மற்றும் இளைஞா்கள் முகாம் நடைபெறுவது குறித்து பொதுமக்களுக்கு ஏன் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லையென கேள்வி எழுப்பினா். ஆனால், கிராம நிா்வாக அலுவலா் மூலமாக முறைப்படி தகவல் தெரிவிக்க அறிவுறுத்தியதாகவும், அதனடிப்படையிலேயே தற்போது முகாம் நடைபெறுவதாகவும் தெரிவித்தனா். ஆனால், அதனை பொதுமக்கள் ஏற்க மறுத்து முகாமை வெள்ளிக்கிழமை நடத்தாமல் முறையாக தகவல் தெரிவித்து மற்றொரு நாளில் தான் நடத்த வேண்டும் என்றனா். இதனை வருவாய் துறையினா் ஏற்றுக்கொண்டு மற்றொரு நாளில் முகாம் நடைபெறுமென தெரிவித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனா். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com