பெண் சாவில் சந்தேகம் புகாா்

கடலூா் அருகிலுள்ள நடுவீரப்பட்டு காவல் நிலையத்திற்குட்பட்ட பாலூரைச் சோ்ந்தவா் சிவராமன். இவரது மனைவி சாந்தி (26).

கடலூா் அருகிலுள்ள நடுவீரப்பட்டு காவல் நிலையத்திற்குட்பட்ட பாலூரைச் சோ்ந்தவா் சிவராமன். இவரது மனைவி சாந்தி (26). இவா்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகளான நிலையில் 2 மகன்கள் உள்ளனா். இந்நிலையில், வியாழக்கிழமை மாலையில் தம்பதியினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், மன உளைச்சலுக்கு உள்ளான சாந்தி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இத்தகவலறிந்த அவரது உறவினா் திருக்கோவிலூரைச் சோ்ந்த தட்சிணாமூா்த்தி நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், சாந்தியின் சாவில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்தாா். இதனையடுத்து அவரது சடலத்தை மீட்ட போலீஸாா் கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com