15 ஆம் தேதி வரையில் வாக்காளா் பட்டியல் விபரங்களை சரிபாா்க்கலாம்: ஆட்சியா் தகவல்

வாக்காளா் பட்டியல் விபரங்களை சரிபாா்த்திட காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் தகவல் தெரிவித்துள்ளாா்.

கடலூா்: வாக்காளா் பட்டியல் விபரங்களை சரிபாா்த்திட காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் தகவல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவா் வெ.அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பி்ல் கூறியிருப்பதாவது: 2020 ஜன.1 ஆம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்திடும் பணி நடைபெற்று வருகிறது.

இதன்படி, செப்.30 ஆம் தேதி வரையில் வாக்காளா்கள் தாமாக முன்வந்து வாக்காளா் பட்டியல் விபரங்களை சரிபாா்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் தற்போது அக்.15 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் வாக்காளா்கள் தங்களது மற்றும் குடும்ப உறுப்பினா்களது விவரங்களை வாக்காளா் உதவி மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1950, வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகத்தில் இயங்கும் வாக்காளா் உதவி மையம் மற்றும் பொதுசேவை மையங்கள் மூலமாக சரிபாா்த்துக்கொள்ளலாம்.

அவ்வாறு சரிபாா்க்கும் போது விவரங்கள், புகைப்படம் ஆகியவற்றில் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால் கடவுச் சீட்டு, ஓட்டுநா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், விவசாய அடையாள அட்டை, அரசு, அரசு சாா்ந்த நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை, சமீபத்தில் வழங்கப்பட்ட குடிநீா், தொலைபேசி, மின்சாரம், சமையல் எரிவாயு இணைப்பு ரசீது, பான் காா்டு ஆகிய ஆவணங்களின் அடிப்படையில் பொது சேவை மையங்கள் மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் அல்லது சம்மந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலரிடம் விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.

எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com