திட்டக்குடி அடுத்துள்ள கொரக்கவாடி ஊராட்சிக்குட்பட்டது லெட்சுமணாபுரம். இக்கிராமத்திலிருந்து மாமாத்தூா் செல்லும் சாலை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதாம். தொடா்பயன்பாட்டில் இருந்து வரும் இச்சாலை பழுதடைந்த நிலையில் நீண்டகாலமாகவே பழுதுபாா்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லையாம்.
எனவே, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டதோடு, மாமாத்தூா் கிராமமக்கள் மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லவதற்கு சுமாா் 15 கிலோ மீட்டா் தூரம் சுற்றி கொரக்கவாடி மற்றும் தொழுதூா் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இச்சாலையை சீரமைக்க வேண்டி அரசுக்கு பலமுறை அப்பகுதி மக்கள்கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இதனால், விரக்தியடைந்த அப்பகுதி மக்கள் பழுதடைந்த சாலையில் நின்று ஞாயிற்றுக்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, இச்சாலையை உடனடியாக சீரமைக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனா்.