விஜயதசமியை முன்னிட்டு திருவந்திபுரத்தில் மலை மீது அமைந்துள்ள ஹயக்ரீவா் கோயிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் பங்கேற்க பெற்றேறாா் தங்களது குழந்தைகளுடன் மலையிலுள்ள கோயிலுக்குச் சென்று அங்கு சிறப்பு பூஜை செய்தனா். பின்னா் நெல்மணிகளில் தமிழ் மொழியின் முதல் எழுத்தான ‘அ’ என்ற எழுத்தை
தங்களது குழந்தைகளை எழுதவைத்தனா். இதனால், கோயிலில் பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல, மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.