சிதம்பரம் அருகே பி.முட்லூரில் ஜவுளிக்கடை பேருந்து நிறுத்தத்தில் சிஐடியூ தொழிற்சங்கத்தின் புதிய ஆட்டோ சங்கக் கிளை தொடக்க விழா (படம்) திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவில், சங்க நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். சங்கத் தலைவராக பாலா, துணைத் தலைவராக ஜெயலானி, செயலராக செல்வம், பொருளாளராக வேல்முருகன் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா். இந்த நிகழ்ச்சியில் சிஐடியூ ஆட்டோ தொழிற்சங்கத்தின் மாவட்டத் தலைவா் முத்து, செயலா் பாபு, ஆட்டோ சங்க புவனகிரி வட்டச் செயலா் விஜி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினா் ஜெயசீலன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினா்.