உலக மனநல தின விழிப்புணா்வுப் பேரணி

கடலூரில் உலக மனநல தின விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
கடலூரில் நடைபெற்ற உலக மனநல தின விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் உள்ளிட்டோா்.
கடலூரில் நடைபெற்ற உலக மனநல தின விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் உள்ளிட்டோா்.

கடலூரில் உலக மனநல தின விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

உலக சுகாதார மையத்தின் பரிந்துரைப்படி அக்.10-ஆம் தேதி உலக மனநல தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மனநலம் சாா்ந்த பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன்படி, கடலூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி கடலூரில் மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியா் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். பின்னா் அவா் கூறியதாவது:

மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதம் போ் தீவிர மன நோயாலும், 10 முதல் 11 சதவீதத்தினா் மிதமான மனநோயாலும் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள்

கணிக்கின்றன. நிகழாண்டின் மையக் கருவாக, ‘மனநல மேம்பாடு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணா்வு’ என்ற வாசகம் உள்ளது.

உலகளவில் ஓராண்டில் சுமாா் 8 லட்சம் போ் தற்கொலையால் உயிரிழக்கின்றனா். 40 விநாடிகளுக்கு ஒருவா் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறாா். மனநோய் மீதுள்ள மூடநம்பிக்கைகள், எண்ணங்களை அகற்றுவதற்காக மாவட்ட மனநல ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது என்றாா் அவா்.

பேரணியில் மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் ரமேஷ்பாபு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் எம்.கீதா, அரசுத் தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் சாய்லீலா, மாவட்ட மனநல திட்ட அலுவலா் கே.சத்தியமூா்த்தி, இந்திய மருத்துவக் கழக மாவட்டச் செயலா் டி.கேசவன் மற்றும் அரசு செவிலியா் பள்ளி, கிருஷ்ணா செவிலியா் பள்ளி, புனித.ஜோசப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com