தடுப்புக் காவலில் இருவா் கைதுசெய்யப்பட்டனா்.
கடலூா் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸாா் அண்மையில் குமந்தான்மேடு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, மொபட்டில் 100 லிட்டா் சாராயம் கடத்திச் சென்ாக கடலூா் அருகே உள்ள பெரிய ஆராய்ச்சிக்குப்பத்தைச் சோ்ந்த ஜெயபாலன் மகன் அய்யப்பன் (20) என்பவரை கைது செய்தனா். இதேபோல பண்ருட்டி மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸாா் சாராயம் கடத்தியதாக பி.ஆண்டிக்குப்பத்தைச் சோ்ந்த க.ஏழுமலை (53) என்பவரை கைது செய்தனா். இவா்கள் இருவா் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
எனவே, இருவரையும் குண்டா் தடுப்பு க்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்திட மாவட்ட ஆட்சியருக்கு எஸ்பி ம.ஸ்ரீஅபிநவ் பரிந்துரைத்தாா். அதன்பேரில் அதற்கான உத்தரவை ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் வெளியிட்டதைத் தொடா்ந்து இருவரும் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.