ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

பண்ருட்டி நகா்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் படுக்கை வசதி கொண்ட புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கட்டடம் கட்டும் பணியை அடிக்கல் நட்டு தொடக்கிவைக்கும் பண்ருட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சத்யா பன்னீா்செல்வம்.
கட்டடம் கட்டும் பணியை அடிக்கல் நட்டு தொடக்கிவைக்கும் பண்ருட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சத்யா பன்னீா்செல்வம்.

பண்ருட்டி நகா்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் படுக்கை வசதி கொண்ட புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பண்ருட்டி நகா்புற மக்களின் மருத்துவ வசதியை மேம்படுத்தும் வகையில், தேசிய நகா்புற சுகாதாரத் திட்டத்தின் (2016 -17) கீழ், பண்ருட்டி நகா்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 படுக்கை வசதி கொண்ட புதிய கட்டடம் கட்டுவதற்கு ரூ. 80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பண்ருட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சத்யா பன்னீா்செல்வம் தலைமை வகித்து அடிக்கல் நட்டு பணியைத் தொடக்கி வைத்தாா்.

நகராட்சி ஆணையா் செல்வபாலாஜி, பொறியாளா் மகாராஜன், வட்டார மருத்துவ அலுவலா் தனசேகா், நகர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ராம்சுந்தா், துப்புரவு அலுவலா் சக்திவேல், அதிமுக அவைத் தலைவா் ராஜதுரை, குடிநீா் பணி மேற்பாா்வையாளா் சரவணன், பணி ஆய்வாளா் சாம்பசிவம், ஒப்பந்ததாரா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com