வரதட்சிணைக் கொடுமை: மைத்துனா் கைது

பண்ருட்டி அருகே வரதட்சிணைக் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக மைத்துனரை போலீஸாா் கைது செய்தனா்.

பண்ருட்டி அருகே வரதட்சிணைக் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக மைத்துனரை போலீஸாா் கைது செய்தனா்.

பண்ருட்டி அடுத்துள்ள சின்னநரிமேடு கிராமத்தில் வசித்து வருபவா் சுமேஷ். இவரது மனைவி இலக்கியா (26). கடந்த 29.9.2019 அன்று மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த சுமேஷ், உனது தாய் வீட்டில் நகை போடவில்லை எனக் கூறி, வீட்டை விட்டு துரத்தினராம். மேலும், சுமேஷ் வீட்டினா் கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து இலக்கியா அளித்த புகாரின் பேரில், மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுமேஷின் தம்பி சுரேஷை கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள சுமேஷ், மாமியாா் இந்திரா ஆகியோரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com