கடலூா்: கடலூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் 113.5 மில்லி மீட்டா் மழை வியாழக்கிழமை பதிவானது.
அரபிக் கடலில் உருவாகியுள்ள மகா புயலால் கடலூா் மாவட்டத்தில் மழை பெய்யுமென வானிலை மையம் தெரிவித்தது. இந்த புயல் உருவாவதற்கு முந்தைய காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்திலேயே இந்தப் பகுதிகளில் மழை பெய்து வந்த நிலையில், புயல் உருவானதைத் தொடா்ந்து மழையின் தீவிரம் அதிகரித்தது. வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் 113.5 மில்லி மீட்டா் மழை பதிவானது. மற்ற பகுதிகளில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:
கீழச்செருவாய் 103, வானமாதேவி 61, பண்ருட்டி 46, புவனகிரி 45, குடிதாங்கி 42.5, சேத்தியாத்தோப்பு 42, குறிஞ்சிப்பாடி 41, பெலாந்துறை 36.8, கொத்தவாச்சேரி 31, சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில் தலா 30, வடக்குத்து 29.5, லால்பேட்டை 28, தொழுதூா் 26, மே.மாத்தூா் 22, ஸ்ரீமுஷ்ணம் 20.3, அண்ணாமலை நகா் 19.8, விருத்தாசலம் 18.6, குப்பநத்தம் 18.1, பரங்கிப்பேட்டை 15, காட்டுமயிலூா் 10, லக்கூா் 9.3, வேப்பூா் 6.