சிதம்பரத்தில் பட்ஜெட் மற்றும் வருமானவரி சட்டத்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சீர்காழி நெல், அரிசி மொத்த வணிக உரிமையாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்துப் பேசினார்.
கணேசன் வரவேற்று பேசினார். ஆடிட்டர்கள் கே.நடராஜபிரபு, என்.ரவிசங்கர், கணக்காளர் கே.ரவிச்சந்திரன் ஆகியோர் வருமான வரி சட்டத்தில் செய்யப்பட்ட மாறுதல்கள் குறித்து சிறப்புரையாற்றினர். சென்னையைச் சேர்ந்த ஆர்.வெங்கட்ராமன் பங்குச் சந்தை முதலீடு குறித்து உரையாற்றினார். குணசேகர தீட்சிதர் நன்றி தெரிவித்தார்.