கஞ்சா விற்ற 2 பேர் கைது

கடலூர் மந்தாரக்குப்பத்தில் கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

கடலூர் மந்தாரக்குப்பத்தில் கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
மந்தாரக்குப்பம் காவல் உதவி ஆய்வாளர் கோபிநாத், என்எல்சி பேருந்து நிலையத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். 
அப்போது, சந்தேகிக்கும் வகையில் அமர்ந்திருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். 
அதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததைத் தொடர்ந்து, அவர்கள் வைத்திருந்த கைப்பையை சோதனையிட்டதில் 40 கிராம் கஞ்சா இருந்தது. 
இதையடுத்து, அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று  விசாரணை நடத்தி
னர். விசாரணையில், மந்தாரக்குப்பம், ஓம்சக்தி நகரைச் சேர்ந்த மணிகண்டன் மகன் அப்பு என்கிற சிவக்குமார் (20), அதே பகுதியைச் சேர்ந்த குமார் மகன் சீனுவாசன்(21) என்பது தெரிய வந்தது. மேலும், அவர்கள் கஞ்ச விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டதின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com