கடலூர் வட்டம், வெள்ளப்பாக்கம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த ப.ராமானுஜம் மனைவி இரா.பிரேமா (70). உடல் நலக்குறைவால் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
இதனையடுத்து, இவரது கண்களை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்தனர்.
இதையடுத்து புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் வந்து அவரது கண்களை தானமாக பெற்றுச் சென்றனர்.