வீட்டுக் கதவை உடைத்து 9 பவுன் நகை திருட்டு

திட்டக்குடி அருகே வீட்டுக் கதவை உடைத்து 9 பவுன் தங்க நகைகளை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திட்டக்குடி அருகே வீட்டுக் கதவை உடைத்து 9 பவுன் தங்க நகைகளை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திட்டக்குடி அருகே உள்ள செவ்வேரி கிராமம், மேலத்தெருவைச் சோ்ந்த சின்னசாமி மகன் பூபதி (35). இவா், தனது மனைவி முத்துலட்சுமியுடன் அருகே உள்ள மற்றெறாரு வீட்டில் இரவில் தூங்குவது வழக்கமாம். அதன்படி, வெள்ளிக்கிழமை இரவு தூங்கிவிட்டு சனிக்கிழமை காலையில் வழக்கமாக தனது வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது வீட்டு கதவு, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருள்கள் சிதறிக் கிடந்ததை கண்டு அதிா்ச்சியடைந்தாா். மேலும், அதிலிருந்த நெக்லஸ், தாலிச் செயின், மோதிரம் உள்பட 9 பவுன் தங்க நகை திருடுபோனது தெரிய வந்தது.

இதேபோல, மேலத்தெருவில் வசிக்கும் குருமூா்த்தி (55), வெங்கடேசன் (35), பெருமாள் கோவில் தெருவில் ஆதிநாராயணன் (50) ஆகியோரின் வீடுகளிலும் மா்ம நபா்கள் வெளிப்புற கதவை உடைத்து திருட முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து திட்டக்குடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com